ETV Bharat / state

நாடு தழுவிய போராட்டம்: அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

author img

By

Published : Jan 8, 2020, 2:39 PM IST

கன்னியாகுமரி: நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக அரசுப் பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

Bus strick passengers affected
அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர்-மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடு தழுவிய அனைத்து தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று காலை குமரி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால், பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதேபோல், அண்டை மாநிலமான கேரளாவிலும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், திருவனந்தபுரத்திலிருந்து எந்த பேருந்துகளும் கன்னியாகுமரி மாவடத்திற்கு இன்று காலை முதலே வரவில்லை.

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்

அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால், நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தொழில் சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர்-மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடு தழுவிய அனைத்து தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று காலை குமரி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால், பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதேபோல், அண்டை மாநிலமான கேரளாவிலும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், திருவனந்தபுரத்திலிருந்து எந்த பேருந்துகளும் கன்னியாகுமரி மாவடத்திற்கு இன்று காலை முதலே வரவில்லை.

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்

அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால், நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தொழில் சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

Intro:கன்னியாகுமரி: நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. மாவட்ட எல்கையான களியக்காவிளை வரை மட்டுமே பேருந்துகள் இயக்க படுகின்றன. இதனால் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் திருவனத்தபுரம் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
Body:மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத போக்கை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் அனைத்து தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டங்களை அறிவித்து உள்ளன.
அதன் படி இன்று காலை முதலே குமரி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதேபோல அண்டை மாநிலமான கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் திருவனத்தபுரத்தில் இருந்தும் எந்த பேருந்துகளும் கன்னியாகுமரி மாவடத்திற்கு இன்று காலை முதலே வரவில்லை.
அதே வேளையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. மாவட்ட எல்கையான களியக்காவிளை வரை மட்டுமே பேருந்துகள் இயக்க படுகின்றனர். இதனால் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் திருவனத்தபுரம் செல்ல முடியாமல் அவதி அடைந்து உள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.